Sunday 10 March 2013

சுகமான விடியல்..!





ஒவ்வொரு நாளும் சுகமாய் விடிகிறது
உன் முகம் பார்ப்பது அதிலும் இனிது!

நினைவுகள் வருதே உன் 
முதல் நாள் அலுவலகம்
திருமணத்திற்கு பின்பு
வேகமாய் நகர்ந்த மணித்துளிகளை
நீ செல்லமாய் கடிந்ததும்
விடை பெற்றுச் சென்ற பின்பும்
பின்னோக்கியே உன் நினைவுகளும்
கூடவே எடுத்துச் சென்ற என் நினைவுகளும்!

சுகமாய் இருந்தது
ஏக்கத்துடன் காத்திருந்த அந்த நிமிடங்கள்
நினைத்துக்கொண்டேன்
நானும் ஒரு கன்னிகையோ
இல்லை இல்லை அவள் பாடோ பணத்திற்காக
என் வாழ்வோ உன் மனத்திற்காக!

ஆதவனும் மறைவான் அக்கறையாய்
என் மனமும் கரையும் உனக்காக
காத்திருந்தேன் நான்
பூரித்த மனதுடன்
என் விழியோ வழியினிலே
நீயும் வருவாய் களைத்து தெளிந்த மனதுடன்
உருவாகுமே புது சொர்க்கம் நம்மிடையே
மீண்டெழுகிறேன் என் நினைவுகளை

உன் வரவுக்காக ஏங்கும் ஒவ்வொரு நளும்
சுகமாய்த்தான் விடிகிறது..!

- சுடர்கொடி

No comments:

Post a Comment